இரண்டாயிரங் காலத்துப் பயிர்
"போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?"
"சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப் போய்ட்டாங்களாம்.."
"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?"
"டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"
"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?"
"ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?"
"அதனால உனக்கென்ன?"
"நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"
"புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"தெரியலையே.."
"புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"
