எழுச்சிப் படலம் - 894
பலவகை ஓசை எழுதல்
894.
மந்திர கீத ஓதை.
வலம்புரி முழங்கும் ஓதை.
அந்தணர் ஆசி ஓதை.
ஆர்த்து எழு முரசின் ஓதை.
கந்து கொல் களிற்றின் ஓதை.
கடிகையர் கவியின் ஓதை.-
இந்திர திருவன் செல்ல -
எழுந்தன. திசைகள் எல்லாம்.
இந்திர திருவன் - இந்திரனது செல்வம் போன்ற செல்வத்தைக்
கொண்டவனாகிய தசரதன்; செல்ல - செல்லுகையில்; மந்திர கீதம்
ஓதை - வேத மந்திரங்களாகிய பாட்டோசையும்; வலம்புரி முழங்கும்
ஓதை - வலம்புரிச் சங்குகள் முழங்குகின்ற ஓசையும்; அந்தணர் ஆசி
ஓதை- அந்தணர்களின் வாழ்த்து ஒலியும்; ஆர்த்தெழு முரசின் ஓதை
- ஆரவாரித்து எழுகின்ற முரசங்களின் முழக்கமும்; கந்து கொல் -
கட்டுத் தறியை முறிக்கின்ற; களிற்றின் ஓதை - யானைகள் பிளிறும்
ஓசையும்; கடிகையர் கவிதை ஓதை - நாழிகைக் கணக்கரின் நாழிகைப்
பாடடின் ஓசையும் (ஆகிய இவை); திசைகள் எல்லாம் எழுந்தன -
திக்குகள் எங்கும் எழுந்தன.
மந்திர கீதம் - சாமகானம். நாழிகைக் கணக்கர் நாழிகையைப்
பாடல் வாயிலாகக் குறிப்பர். 78
