கார்முகப் படலம் - 757

bookmark

757.    

என். “இது கொணர்க” என.
   இயம்பினான்?’ என்பார்;
‘மன்னவர் உளர்கொலோ
   மதி கெட்டார்?’ என்பார்;
‘முன்னை ஊழ் வினையினால்
   முடிக்கில் ஆம்’ என்பார்;
கன்னியும் இச் சிலை
   காணுமோ?’ என்பார்.
 
இது கொணர்க என- இந்த வில்லைக் கொண்டு வருக என்று; என்
இயம்பினான்  -  எதற்காகச் சொன்னான் (இம் மன்னன்); என்பார் -
என்று  கூறுபவர்களும்;  மதி கெட்டார் (வில்லை வளைக்க விரும்பிய)
இம்  மன்னனைப்  போல; மன்னவர் உளர்கொல் - அறிவற்ற அரசர்
வேறு    யாரேனும்    இருக்கினறார்களா?;    என்பார்   -  என்று
சொல்பவர்களும்;  முன்னை ஊழ்வினையினால் - முற்பிறப்பில் செய்த
நல்வினையால்;    முடிக்கில்    ஆம்    என்பார்   -      ஒரு
வேளை     வளைத்தலும் கூடும்  என்று  கூறுபவர்களும்;  கன்னியும்
இச்சிலை  - கன்னியான சீதையும் இந்த வில்லை; காணுமோ என்பார்
- கண்டிருப்பாளோ என்று சொல்பவர்களும்.  

இந்த     வில்லைக் கன்னியின் திருமணத்தின்  பொருட்டு  வைத்த
இவனைப்   போல   மதிகெட்ட   அரசர்   இருக்கமுடியாது  என்பது.
வளைக்கப்படாது   கிடக்கும்   இந்த   வில்லைச்    சீதை   கண்டாள்
கலங்குவாள் என்றார்.                                        8