கார்முகப் படலம் - 759
வில்லைக் கண்ட வேந்தவர்கள் கைவிதிர்த்தல்
759.
மொய்த்தனர் இன்னணம்
மொழியாக. மன்னன் முன்
உய்த்தனர். நிலம் முதுகு
உளுக்கிக் கீழ் உற.
வைத்தனர்; ‘வாங்குநர்
யாவரோ?’ எனா.
கைத்தலம் விதிர்த்தனர்.
கண்ட வேந்தரே.
மொய்த்தனர் - (அங்கே) நெருங்கிக் கூடியிருந்த மிதிலை மக்கள்;
இன்னணம் மொழிய - இவ்வாறு பலபடியாகச் சொல்லிக்
கொண்டிருக்க; மன்னன் முன் - (அதனைச் சுமந்து வந்த பணியாளர்)
சனகன் முன்பு; உய்த்தனர்- கொண்டு வந்து; நிலம் முதுகு உளுக்கி -
நிலமகளின் முதுகு (சுமை தாங்காமல்) நெளிந்து குழிந்து போகும்படி;
கீழ்உற வைத்தனர் - (பூமியின் மேல்) அந்த வில்லை வைத்தார்கள்;
கண்ட வேந்தர் - (அந்த வில்லை) நேரே பார்த்த அரசர் யாவரும்;
வாங்குநர் யாவரோ - (இந்த வில்லை) வளைக்கப் போகின்றவர்
யாரோ? (எவராலும் வளைக்கமுடியாது); எனா - என்று கூறி;
கைத்தலம் விதிர்த்தனர் - (அந்த வில்லைத் தொடுவதற்கும் கூசி)
கைந் நடுக்கம் எடுத்தனர்.
பணியாளர் அவ்வில்லை அரசன்முன் வைத்த அளவில் அதைக்
கண்ட அரசர் இவ்வில்லை வளைக்க எவராலும் முடியாது எனக் கூறிக்
கைந்நடுக்கம் எடுத்தனர் என்பது. 10
