கார்முகப் படலம் - 759

bookmark

வில்லைக் கண்ட வேந்தவர்கள் கைவிதிர்த்தல்
 
759.

மொய்த்தனர் இன்னணம்
   மொழியாக. மன்னன் முன்
உய்த்தனர். நிலம் முதுகு
   உளுக்கிக் கீழ் உற.
வைத்தனர்; ‘வாங்குநர்
   யாவரோ?’ எனா.
கைத்தலம் விதிர்த்தனர்.
   கண்ட வேந்தரே.
 
மொய்த்தனர்   - (அங்கே) நெருங்கிக் கூடியிருந்த மிதிலை மக்கள்;
இன்னணம்    மொழிய    -   இவ்வாறு   பலபடியாகச்  சொல்லிக்
கொண்டிருக்க;  மன்னன் முன் - (அதனைச் சுமந்து வந்த பணியாளர்)
சனகன் முன்பு; உய்த்தனர்- கொண்டு வந்து; நிலம் முதுகு உளுக்கி -
நிலமகளின்  முதுகு (சுமை தாங்காமல்) நெளிந்து குழிந்து   போகும்படி;
கீழ்உற  வைத்தனர்  - (பூமியின் மேல்) அந்த வில்லை வைத்தார்கள்;
கண்ட  வேந்தர்  -  (அந்த வில்லை) நேரே பார்த்த அரசர் யாவரும்;
வாங்குநர்  யாவரோ  -  (இந்த  வில்லை)  வளைக்கப்  போகின்றவர்
யாரோ?   (எவராலும்   வளைக்கமுடியாது);   எனா  -  என்று  கூறி;
கைத்தலம்  விதிர்த்தனர்  -  (அந்த  வில்லைத் தொடுவதற்கும் கூசி)
கைந் நடுக்கம் எடுத்தனர்.  

பணியாளர்     அவ்வில்லை அரசன்முன் வைத்த அளவில் அதைக்
கண்ட அரசர் இவ்வில்லை  வளைக்க எவராலும் முடியாது எனக்  கூறிக்
கைந்நடுக்கம் எடுத்தனர் என்பது.                              10