கார்முகப் படலம் - 761

bookmark

761.    

‘இமைய வில் வாங்கிய ஈசன். “பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன” ஓங்கிய
கமை அறு சினத்தன் இக் கார்முகம் கொளா.
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.
 
இமையவில்- மேருமலையை வில்லாக; வாங்கிய ஈசன்-  வளைத்த
சிவன்;  பங்கு உறை - (தன்) இடப்பக்கத்திலே வாழும்; உமையினை-
உமா   தேவியை;   இகழ்ந்தனன்  என்ன  -  (தந்தையான  தக்கன்)
அவமதித்தான் என்ற காரணத்தால்; ஓங்கிய - பொங்கியெழுந்த; கமை
அறுசினத்தன்   -   பொறுமையற்ற  சினத்தை  யுடையவனாய்;  இக்
கார்முகம்  கொளா -  இந்த வில்லை எடுத்துக்கொண்டு; சமை உறு-
நடந்து   கொண்டிருக்கின்ற;  தக்கனார்  வேள்வி  -  தக்கனது யாக
சாலையை; சார - (நோக்கிச்) சேர.

மந்தரம்.     இமயம்.    கைலாயம்    என்பவற்றை    மேருவுடன்
வேறுபாடின்றிக்   கூறுவது  நூல்  வழக்காகும்.  ‘இமயவில்    வாங்கிய
ஈர்ஞ்சடை அந்தணன்’ - கலித். 3.                             12