குலமுறை கிளத்து படலம் - 739
தசரதன் சுதையைத் தன் தேவியர்க்கு அளித்தல்
739.
‘பொன்னின் மணிப் பரிகலத்தில்
புறப்பட்ட இன் அமுதை.
பன்னு மறைப்பொருள் உணர்ந்த
பெரியோன்தன் பணியினால்.
தன் அனைய நிறை குணத்துத்
தசரதனும். வரன்முறையால்.
நல் நுதலார் மூவருக்கும்.
நாலு கூறிட்டு. அளித்தான்.
பொன்னின் மணி- பொன்னாலாகிய அழகிய; பரி கலத்தில் -
பாத்திரத்துடன்; புறப்பட்ட இன் அமுதை - வெளிப்பட்ட அந்த
இனிய உணவை; பன்னு மறைப் பொருள் - சிறப்பாகச்
சொல்லப்படுகின்ற வேதங்களின் பொருள்களை; உணர்ந்த
பெரியோன்தன் - அறிந்த (அறிவொழுக்கங்களில் மேம்பட்ட) அக்
கலைகோட்டு முனிவனது; பணியினால் - கட்டளையால்; தன் அனைய
- தனக்குத் தானே நிகரான; நிறைகுணத்து - நிறைந்த நற்பண்புகளைக்
கொண்ட; தசரதனும் - தசரத மன்னனும்; வரன்முறையால் - வரிசை
முறைப்படி; நல் நுதலார் மூவருக்கும் - அழகான நெற்றியுடைய
(கோசலை முதலான) பட்டத்தரசிகள் மூவருக்கும்; நாலு கூறு இட்டு -
நான்கு பங்காக்கி; அளித்தான் - கொடுத்தான்
மூன்கு பங்குகளை முறையே கோசலை. கைகேயி. சுமித்திரை
ஆகியோர்க்குக் கொடுத்து எஞ்சிய நான்காம் பங்கினை மீண்டும்
சுமத்திரைக்கு அளித்தான் என்ப. 19
