குலமுறை கிளத்து படலம் - 748
இராமன் படைக்கலங்களின் சிறப்பு
இராமனது வில்லாற்றல்
748.
‘ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
இவற்கு ஏவல் செய்குனவால்.
ஐயா - அரசே!; அயற்கேயும் அறிவு அரிய - பிரமனாலும் அறிய
முடியாத இராமனின் பெருமைகளை; ஆய்ந்து ஏற உணர் -
ஆராய்ந்து முழுவதும் உணர்க; உலகு அனைத்தும் - உலகங்கள்
எல்லாவற்றையும்; கடலோடும் - கடல்களுடனும்; மலையோடும் -
மலைகளுடனும்; காய்ந்து - எரிந்து; தீய்ந்து ஏற - கரிந்து போகும்படி;
சுடுகிற்கும் படைக்கலங்கள் - எரிக்கவல்ல படைக்கருவிகள்; செய்
தவத்தால் - செய்த தவப் பயனால்; ஈந்தேனும் - பெற்றுக் கொடுத்த
நானும்; மனம் உட்க - நெஞ்சு நடுங்குமாறு; இவற்கு ஏவல் செய்குன
- இந்த இராமனுக்கு குற்றேவல் செய்து நிற்கின்றன.
‘ஈந்தேனும் மனம் உட்க’ என்றது தன்னிடத்திலும் இராமனிடம்
ஆயுதங்கள் மிக்க அன்புபூண்டு பணி செய்கின்றன’ என்பதாம் ஆல்.
ஏ - அசைகள். 28
