மிதிலைக் காட்சிப் படலம் - 616

bookmark

காதல் நோயால் பிராட்டி புலம்பல் (616-622)

616.

‘அல்லினை வகுத்தது ஓர் அலங்கற் காடு’ எனும்;
‘வல் எழு ; அல்லவேல். மரகதப் பெருங்
கல்’ எனும். ‘இரு புயம்’ ; ‘கமலம் கண்’ எனும்;
‘வில்லொடும் இழிந்தது ஓர் மேகம்’ என்னுமால்.
 
(சீதை) அல்லினை வகுத்தது- இருளைக் கொண்டு; ஓர்அலங்கல்
காடு -  அமைக்கப்பட்ட  பூமாலைகள்  உள்ள காடு (இராமனதுமுடி);
என்னும் - என்று சொல்வாள்;  இருபுயம் - அவனுடைய   இரண்டு
தோள்களும்; வல் எழு - வலிய தூண்களாம்; அல்லவேல் - அவை
இல்லாவிட்டால்;  மரகதப்  பெருங்கல் - மரகதக்  கற்கள் மயமான
பெருமலைகளே;   எனும்   .   என்பாள்;  கண்  கமலம் எனும்
-   (அவனுடைய)     கண்கள்   செந்தாமரை   மலர்    என்பாள்;
வில்லொடும்  இழிந்தது  -  (அவனது திருமேனி) இந்திரவில்லுடன்
வானத்திலிருந்து இறங்கிய; ஓர்மேகம் என்னும் - ஒரு மேகம் என்று
சொல்வாள்.   

இராமனிடம்   தன்மனம் செல்லப் பெற்ற சீதை அவனைக் குறித்து
வாய் பிதற்றுவதாகும்.  அல் வகுத்ததோர் காடு: குடுமியின் கருமையும்.
மயிர்களின் அடர்த்தியும்  கருதியது. எழு - இரும்புத்தூண்: தோள்கள்
திரண்டு   உருண்டு  நீண்டிருத்தலால்   தோளுக்கு  இரும்புத்  தூண்
உவமையாயிற்று.                                          53