வ.உ.சி.க்கு வாழ்த்து

வ.உ.சி.க்கு வாழ்த்து

bookmark

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
  மன்னனென மீண்டான் என்றே கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
  வருந்தலைஎன் கேண்மைக்கோவே!
தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்
  நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
  வாழ்த்துதிநீ! வாழ்தி! வாழ்தி!