எழுச்சிப் படலம் - 890
மண்டலாதிபர்கள் நெருங்கிச் செல்லுதல்
890.
‘கண்டிலன் என்னை’ என்பார்;
‘கண்டனன் என்னை’ என்பார்;
‘குண்டலம் வீழ்ந்தது’ என்பார்;
‘குறுக அரிது. இனிச்சென்று’ என்பார்;
‘உண்டுகொல். எழுச்சி?’ என்பார்;
‘ஒலித்தது சங்கம்’ என்பார்;
மண்டல வேந்தர் வந்து
நெருங்கினர். மயங்க மாதோ.
சங்கம் ஒலித்தது- (சிலர்) சங்கு ஒலித்தது; என்பார் - என்பவரும்
; எழுச்சி உண்டு கொல் - (அரசன்) புறப்பாடு இருக்கும்போலும்;
என்பார் - என்பார்களும்; மண்டல வேந்தர் - பெருந்திரளான
அரசர்கள்; மயங்க வந்து - ஒன்றாகச் சேர்ந்து வந்து; என்னைக்
கண்டிலன் - (சிலர்) என்னைக் (இவ்வரசன்) காணவில்லை; என்பாரும்
- என்பவரும்; என்னைக் கண்டனன் - (சிலர்) என்னைக் கண்டான்;
என்பாரும் - என்பவரும்; குண்டலம் வீழ்ந்தது - (சிலர்) எனது
குண்டலம் கீழே வீழ்ந்து விட்டது; என்பாரும் - என்பவரும்; இனிச்
சென்று - (சிலர்) இனிமேல் போய்; குறுக அரிது என்பார் - (அந்த
அரசனை) அணுக முடியாது என்பார்களுமாகி; நெருங்கினர் -
(அரசனைத் தொடர்ந்து) நெருங்கி நின்றார்கள்.
வந்திருந்த மண்டல அரசர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு
கூறிக்கொண்டே வந்து தசரதனை நெருங்கினர் என்பது. 74
