எழுச்சிப் படலம் - 894

bookmark

பலவகை ஓசை எழுதல்

894.

மந்திர கீத ஓதை.
   வலம்புரி முழங்கும் ஓதை.
அந்தணர் ஆசி ஓதை.
   ஆர்த்து எழு முரசின் ஓதை.
கந்து கொல் களிற்றின் ஓதை.
   கடிகையர் கவியின் ஓதை.-
இந்திர திருவன் செல்ல -
   எழுந்தன. திசைகள் எல்லாம்.
 
இந்திர   திருவன் -  இந்திரனது செல்வம் போன்ற செல்வத்தைக்
கொண்டவனாகிய  தசரதன்; செல்ல  -  செல்லுகையில்; மந்திர கீதம்
ஓதை  - வேத மந்திரங்களாகிய பாட்டோசையும்; வலம்புரி முழங்கும்
ஓதை - வலம்புரிச் சங்குகள் முழங்குகின்ற ஓசையும்; அந்தணர் ஆசி
ஓதை- அந்தணர்களின் வாழ்த்து ஒலியும்; ஆர்த்தெழு முரசின் ஓதை
-  ஆரவாரித்து  எழுகின்ற  முரசங்களின் முழக்கமும்; கந்து கொல் -
கட்டுத்  தறியை  முறிக்கின்ற; களிற்றின் ஓதை - யானைகள் பிளிறும்
ஓசையும்; கடிகையர் கவிதை ஓதை - நாழிகைக் கணக்கரின் நாழிகைப்
பாடடின் ஓசையும்  (ஆகிய  இவை); திசைகள் எல்லாம் எழுந்தன -
திக்குகள் எங்கும் எழுந்தன. 

மந்திர  கீதம்  -  சாமகானம்.  நாழிகைக்  கணக்கர்  நாழிகையைப்
பாடல் வாயிலாகக் குறிப்பர்.                                 78