கிளிவிடுதூது

கிளிவிடுதூது

bookmark


சொல்ல வல்லாயோ? - கிளியே! 
சொல்ல நீ வல்லாயோ? 

அனுபல்லவி 

வல்ல வேல்முரு கன்தனை -இங்கு 
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல) 

சரணங்கள் 

தில்லை யம்பலத்தே - நடனம் 
  செய்யும் அமரர்பிரான் -அவன் 
செல்வத் திருமகனை - இங்கு வந்து 
  சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல) 

அல்லிக் குளத்தருகே - ஒருநாள் 
  அந்திப் பொழுதினிலே - அங்கோர் 
முல்லைச் செடியதன்பாற் -செய்தவினை 
  முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல) 

பாலை வனத்திடையே - தனைக் கைப் 
  பற்றி நடக்கையிலே - தன் கை 
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன 
  விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)