குலமுறை கிளத்து படலம் - 736
தசரதன் கலைக்கோட்டுமுனியை வேண்டல்
736.
“தார் காத்த நறுங் குஞ்சித்
தனயர்கள். என் தவம் இன்மை.
வார் காத்த வன முலையார்
மணி வயிறு வாய்த்திலரால்;
நீர் காத்த கடல் புடை சூழ்
நிலம் காத்தேன்; என்னின். பின்.
பார் காத்தற்கு உரியாரைப்
பணி. நீ” என்று அடி பணிந்தான்.
என் தவம் இன்மை - (முற்பிறப்பில்) நான் நற்றவம்
செய்யாமையால்; தார் காத்த - பூமாலை யணிகின்ற; நறுங்குஞ்சி -
நறுமணமுள்ள முடியை உடைய; தனயர்கள் - மைந்தர்கள்; வார்
காத்த வனமுலையார் - கச்சு அணிந்த அழகிய தனங்களையுடைய
என் மனைவியரின்; மணி வயிறு வாய்த்திலர் - அழகிய கருப்பத்தி(ல்)
தோன்றவில்லை - ஆல் - ஆதலால்; நீர் காத்த கடல் காத்த - நீர்
நிறைந்த கடலால் சூழப்பட்ட; நிலம் காத்தேன் - நிலவுலகம்
முழுவதையும் ஆட்சி புரிந்த; என்னின்பின் - எனக்குப் பின்பு; பார்
காத்தற்கு - இந்த உலகைக் காப்பதற்கு; உரியாரை - உரிய
நல்ல மைந்தரை; நீ பணி என்று - (நான் பெறுமாறு) நீ அருள்
செய்க என்று கூறி; அடி பணிந்தான் - (தசரதன் அக்
கலைக்கோட்டு முனிவரின்) திருவடிகளை வணங்கினான்.
‘கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’ (பெருமாள் திரு.8:1).
வயிறு வாய்த்தல் - பண்புடைய மக்களைக் கருப்பத்தில்
கொள்ளுதல். 16
