தில்லை நடராஜன் இராமச்சந்திரன்

bookmark

அவரின் கல்வி பயணம்:

தில்லை நடராஜன் – காமாட்சியம்மாள் இணையருக்கு 18 ஆகஸ்டு 1934ல் பிறந்த இராமச்சந்திரன், சட்டக் கல்வி பயின்று 9 ஆகஸ்டு 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 13 செப்டம்பர் 1956ல் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்:

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி. ந. இராமச்சந்திரன் சிறப்பு செய்யப்பட்டார். 1984ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராடி தருமபுர ஆதீனம் சைவ சித்தாந்த கலாநிதி பட்டத்தை வழங்கியது. இராமச்சந்திரனின் தமிழ் இலக்கியத்திற்கான பணியைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 6 அக்டோபர் 2011ல் தமிழ் இலக்கியத்திற்கான முனைவர் பட்டம் வழங்கியது. தி. ந. இராமச்சந்திரன், தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், சேக்கிழார் அடிப்பொடி எனும் பாராட்டைப் பெற்றார்.

அவரின் படைப்புகள்:

  • தி. ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் சில:

  • பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்

  • பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்

  • Tirumurai the Second

  • Tirumurai The Seventh

  • SAYINGS

  • UTTERANCES

  • Kaivalya Navaneetham

  • Brahmmasuthra Siva Advaitha

  • Chitrakavi Maalai

  • Max Mullar