மரங்கொத்தி

மரங்கொத்தி

bookmark

மரங்கொத்தி

ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மரத்தை கொத்தும். இரண்டு அல்லது மூன்று நொடிகளில் 3843 முறை ஒரு மரத்தைக் கொத்துகிறது.

இதற்க்கு நடக்க தெரியாது.

நாக்கு அதன் அலகைவிட ஐந்து மடங்கு நீண்டதாகும். 

நாக்கு நீளமாகவும், பசைத் தன்மையும் கொண்டிருப்பதால் தன் அலகு செல்ல முடியாத மரப் பொந்துகளில் நாக்கை நுழையச் செய்து, அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

இதற்க்கு தனித்த குரல் கிடையாது. அதன் கொத்தும் திறனை வைத்து தான் ஓசையை எழுப்புகிறது.

ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மரத்தை கொத்துவதால், மரத்திலிருந்து ஏராளமான தூசிகள் வெளிப்பட்டு அதன் நாசி வழியே செல்கிறது. அதில் இருந்து பாதுகாக்க, இவைகளின் மூக்கின் மீது அதிகமான ரோமங்கள் வளர்ந்து இருக்கிறது.

இவற்றின் மூலம் காற்றை மற்றும் சுவாசித்துக்கொண்டு மரத்துகளை வெளியேற்றுகிறது. இயற்கையான வடிகட்டி போல தகவமைப்பு பெற்றிருப்பது ஆச்சரியம் தான். அதனுடைய கண்கள், எலும்பு திசுக்களால் அழுத்தமாக சூழப்பட்டுள்ளதால் அவற்றிற்கு எவ்வித பாதிப்போ, அதிர்வோ ஏற்படுவதில்லை. 

அனேகமான பறவைகள் மரப் பொந்துகளில் கூடுகளை அமைக்கும்போது ஒரு நுழை வாயிலை மாத்திரமே அமைக்கின்றன ஆனால் இவை தமது தற்பாதுகாப்பிற்காக இரண்டு வாயில்களை அமைத்துக் கொள்கின்றன. ஒரு வாயிலால் ஏதும் எதிரி விலங்குகள் வந்தால் இரண்டாவது வாயிலால் அது தப்பிததுவிடும்.

ஒரு பறவை மற்றப் பறவைகளுடன் தகவல்களைப் பறிமாற்றிக் கொள்ளவும் தமக்கு எதிகளிடமிருந்து ஆபத்து ஏற்படும்போது தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மரங்களைக் கொத்துவதன் மூலம் ஓசை எழுப்புகின்றன.