மிதிலைக் காட்சிப் படலம் - 619

bookmark

இராமனை நினைந்து சீதை உருகுதல்
 
619.

‘இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்.
சந்திர வதனமும். தாழ்ந்த கைகளும்;
சுந்தர மணி வரைத் தோளுமே. அல; 
முந்தி. என் உயிரை. அம் முறுவல் உண்டதே!
 
இந்திர    நீலம் ஒத்து- இந்திர நீலம் என்ற மணிக்கு  ஒப்பாக;
இருண்ட  குஞ்சியும்  -  கறுத்த  மயிர்முடியும்; சந்திர  வதனமும்
- முழுநிலவு  போன்ற  முகமும்;  தாழ்ந்த கைகளும் -  (முழங்கால்
வரை)   தொங்கும்    கைகளும்;   சுந்தர  மணிவரை -  அழகிய
நீலமணிமலைகள்  போன்ற  -  தோளுமே  -  தோள்களும் என்னும்
இவையே;  அல - அல்ல  (அவ்வாறாயின்  பின்   யாது  என்றால்);
அம்  முறுவல்  -   அந்தப் புன்னகைதான்;   முந்தி  -   (இவை
எல்லாவற்றுக்கும்)  முற்பட்டு;  என்   உயிரை   உண்டது - எனது
உயிரைக் கவர்ந்தது.  

முறுவர்:   மகிழ்ச்சிக் குறிப்பு. இந்திர நீலம்: சிறந்த சாதி நீல மணி.
என்   காதலனுடைய   குஞ்சி   முதலியன  என்  உயிரை  உண்டன
என்றாலும்  முற்பட்டு உயிரை உண்டது அவனது புன்முறுவலே என்று
வருந்திக் கூறுகிறாள் சீதை.                                 57