மிதிலைக் காட்சிப் படலம் - 621
621.
‘உரைசெயின். தேவர்தம் உலகு உளான் அலன்-
விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன். மார்பின் நூலினன்.
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால்.
உரை செயின் - (அவ் ஆண்மகனை இன்னான் என்று) சொல்லப்
புகுந்தால்; தேவர்தம் உலகு - தேவர் உலகத்தில்; உளான் அலன்
- உள்ள ஒரு விண்ணவன் அல்லன் ; விரைசெறி தாமரை -
(ஏனெனில்) மணமுள்ள செந்தாமரை போலும்; இமைக்கும்
மெய்ம்மையான் - கண்கள் இமைக்கும் தன்மையுடையவன்;
வரிசிலை தடக்கையன் - கட்டமைந்த வில்லை ஏந்திய பெரிய
கையையுடையவன்; மார்பின் நூலினன் - மார்பில் பூணூல்
தரித்தவன் (அவன்); அரசு இளங்குமரனே - இளம்பருவமுடைய
அரச குமாரனாகவே; ஆகல் வேண்டும் - இருத்தல் வேண்டும்.
அவனை முதலில் தேவனோ என்று ஐயப்பட்டவள்
கண்ணிமைத்தலால் அந்த ஐயம் நீங்கினாள். பின் கைவில்லும்.
மார்பின் நூலும் கண்டமையால் ‘அரசகுமாரனே அவன்’ என்று
தெளிந்தாள். அணி: ஐயவணி. 55
