வலம்புரி அ.பாலசுப்பிரமணியம்

bookmark

பிறப்பும் இளமையும்:

தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரைக்கு அண்மையில் உள்ள வலம்புரி எனும் ஊரில் பிறந்தவர் அ. பாலசுப்பிரமணியப்பிள்ளை. இவர் பெற்றோர் அண்ணாசாமி பிள்ளை சுந்தரத்தம்மாள். தொடக்கக் கல்வியை அன்னப்பன் பேட்டைத் திருமடத்துச் சுவாமிகளிடம் கற்றார். இளமையிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றிருந்தார்.

ஆசிரியர் பணி:

கணிதமேதை இராமானுஜம் உள்ளிட்ட பெருமை மிக்கோர் பலர் பயின்ற குடந்தை நகர மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் பாலசுப்பிரமணியம். ஒரு பணியிடத்திற்குப் பல பேர் விண்ணப்பத்தால் போட்டித் தேர்வு நடத்தப் பெற்றது. கடினமான அத்தேர்வில் இரண்டு பேர் சம மதிப்பெண்கள் பெற்று முன்னிலைப் பெற்றனர். ஒருவர் பின்னத்தூர் நாராயணசாமி, மற்றொருவர் அ. பாலசுப்பிரமணியம்.

தமிழ்ப் பணி:

வை. கோவிந்தசாமிப் பிள்ளை என்பவர் யதார்த்த வசனம் எனும் இதழை நடத்தினார். அதில் பிள்ளையவர்கள் தொடர்ந்து அரிய பல கட்டுரைகள் எழுதினார். தி. வை. சதாசிவப் பண்டாரத்தாருடன் சேர்ந்து ‘பன்னிரு திருமுறை ஆசிரியர் வரலாறு’ என்ற நூலை எழுதினார். குப்புசாமி ராஜீ என்பவர் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ‘தருக்க கௌமுகி’ என்ற நூலுக்கு இவர் முகவுரை எழுதியுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் உருவானதற்குக் காரணமாக இருந்தவர்கள் பதின்மர். அவர்களுள் ஒருவர் அ. பாலசுப்பிரமணியம்.