கார்முகப் படலம் - 758
758.
‘இச் சிலை உதைத்த கோற்கு
இலக்கம் யாது?’ என்பார்;
‘நச் சிலை நங்கைமேல்
நாட்டும். வேந்து’ என்பார்;
‘நிச்சயம் எடுக்கும்கொல்
நேமியான்!’ என்பார்;
சிற்சிலர். ‘விதி செய்த
தீமை ஆம் என்பார்.
இச்சிலை - இந்த வில்; உதைத்த கோற்கு - (தன்னிடத்திலிருந்து)
செலுத்திய அம்புக்கு; இலக்கம் யாது - குறியாக அமைவது எது;
என்பார் - என்று சொல்பவர்களும்; வேந்து - சனக மன்னன்;
நச்சிலை - பெருமை மிக்க இந்த வில்லை; நங்கை மேல் -
நங்கையான இச் சீதையின் திறத்திற்காகவே; நாட்டும் - நிலை
நிறுத்தி?யுள்ளான்; என்பார் - என்று கூறுபவர்களும்; நேமியான் -
சக்கரப் படை ஏந்திய திருமாலாகிய இந்த இராமனும்; நிச்சம் எடுக்கும்
கொல் - உறுதியாக இந்த வில்லை எடுத்து வளைப்பானா; என்பார் -
என்று கூறுபவர்களும்; சிற்சிலர் - சிலபேர்; விதி செய்த தீமை தான்
- ஊழ்வினை விளைத்த தீமையே (இவ்வாறு அமைந்தது); என்பார் -
என்று வருந்துபவர்களும் (ஆனார்).
வில்லைக் குறித்துக் கண்டவர் பலபடப் புனைந்து கூறுவது. உயர்வு
குறிக்கும் இடைச்சொல். 9
