மிதிலைக் காட்சிப் படலம் - 617

bookmark

617.

‘நெருக்கி உள் புகுந்து. அரு
   நிறையும் பெண்மையும்
உருக்கி. என் உயிரொடு
   உண்டு போனவள்
பொருப்பு உறழ் தோள்
   புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன்
   காமன் அல்லனே!
 
நெருக்கி   உள்புகுந்து- (என் மனத்துள்ளே) நெருக்கிப்  புகுந்து;
அருநிறையும்   -   அழிக்க   முடியாத   என்  மன  உறுதியையும்;
பெண்மையும்  -  (நாணம் முதலிய பிற) பெண்மைக் குணங்களையும்;
உருக்கி - இளகச் செய்து; என் உயிரொடும் - (அவற்றை)    எனது
உயிருடன்;     உண்டு  போனவன் - கவர்ந்து  சென்ற  உத்தமன்.
(மன்மதனோ என்றால்);  பொருப்பு  உறழ்தோள்  -  மலைபோன்ற
தோளிலே; புணர் புண்ணியத்தது  -   சேர்ந்த  நல்வினையுடையது;
கருப்பு   வில்   அன்று  -   கரும்பு   வில்  அன்று (ஆதலால்);
அவன் காமன் அல்லனே - அவன் மன்மதன் இல்லை.   

இராமனது     அழகிலே மயங்கிய சீதை இவன் மன்மதனோ என
ஐயுற்றாள்.  பின் கையில் கரும்பு வில் இல்லாமல் மூங்கில் வில்லையே
வைத்திருந்ததால் இவன் காமன் இல்லை என்று தெளிந்தாள்.      54