மிதிலைக் காட்சிப் படலம் - 618

bookmark

618.

‘பெண்வழி நலனொடும். பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும். நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்து. அடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?
 
பெண்வழி    -  பெண்ணிடம் இயல்பாக உள்ள; நலனொடும் -
அழகையும்; நாணொடும்  -  உடன்பிறந்த  நாணத்தையும்; எண்வழி
உணர்வும் -  மனத்திலுள்ள  அறியையும்;  எங்கும் காண்கிலேன் -
(அம் மைந்தன்  வந்து  போனபின்)  நான்  காண்கிறேன்  அல்லேன்;
அடி வருந்த  - (ஆதலால்) தன் திருவடிகள் வருந்துமாறு; மண்வழி
நடந்து போனவன்  -  தரையிலே நடந்து சென்ற அந்த இளைஞன்;
கண்வழி   நுழையும்  -    கண்களின்   வழியே  மனத்திற்குள்ளே
செல்லவல்ல;  ஓர்கள்வனே கொல் ஆம் - ஒரு கள்வன்  போலும்!  

‘கண்வழி   நுழையும் ஓர் கள்வன்’ - விசித்திரமான கள்ளன். அம்
மைந்தனை  நான்  கண்டவுடனே ‘என்னுடைய நலன். நாண். உணர்வு
என்ற  இவற்றை  இழந்தேன்.  ஆகையால்.  அம் மைந்தன் கண்டார்
கண்வழியே  புகுந்து  கரந்து  செல்ல  வல்லவன்’  என்கிறாள் சீதை.
எண்வழி:  எண்ணுமிடத்து;எண் வழியுணர்வு-  எண்ணத்தின்  வழியே
செல்கின்ற அறிவு.                                       56