மிதிலைக் காட்சிப் படலம் - 622

bookmark

622.

‘பிறந்துடை நலம் நிறை பிணித்த எந்திரம்.
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அக் குமரனை. இன்னும். கண்ணிற் கண்டு.
அறிந்து. உயிர் இழக்கவும் ஆகுமேகொலாம்?’
 
பிறந்த உடை - (என்) உடன் பிறந்து எனக்கு உடைமையாயுள்ள;
நலம்நிலை  -   நல்ல   மனவுறுதி  ஆகிய;  பிணித்த  எந்திரம்
- கட்டமைந்த  இயந்திரம்; கறங்குபு திரியும்  -  சுழன்று  திரிதற்கு
இடமான; என் கன்னி மாமதில்  - (காவல்  புரியும்) மதிலின் மேல்
பொருத்தப்பெற்றுப்  பிறரை  அணுகவிடாது  காக்கும் எனது கன்னித்
தன்மையாகிய    பெரிய   மதிலை;  எறிந்த -  அழித்துச்   சென்ற;
அக்குமரனை - அந்தக்  குமரனை;  இன்னும்  -   மற்றொருமுறை;
கண்ணில்  கண்டு  -  கண்களால்  கண்டு;  அறிந்து -  அவனை
(இன்னான்  இத்தகையவன்  என)  அறிந்து;  உயிர்  இழக்கவும் -
(அதன் பின்பு) எனது உயிரை இழக்கவாயினும்; ஆகுமே கொல் ஆம்
- கூடுமோ?  

கன்னிமை மனத்துள்ளே ஓர் ஆடவனும் செல்லமுடியாதபடி காத்து
வருதால்  அதனை  ‘மதில்’  என்றார்;  நிறை அந்தக் கன்னிமைக்கும்
காவலாய்  நின்று  உறுதி  தருவதால்  அதனை  ‘எந்திரம்’  என்றார்.
உருவகம்:  ‘’காமக்  கணிச்சி உடைக்கும் நிறையென்னும்.  நாணுத்தாழ்
வீழ்ந்த  கதவு’’  (குறள்:  1251).  அந்தக்  குமரனைக் கண்டு அவனை
அணைய  முடியாது  போயினும்  இன்னான்  இனையான் என அறிய
இயலுமா?  நானோ  காம  தேவனைப்  பட்டு  உயிர் துறப்பது உறுதி;
ஆனால் அவனை என் கணகளால் கண்டு களித்தால் அதன்பின் என்
உயிர்  போவதாயினும்  போகுக.  அதுவும்  எனது பேறே. இயந்திரம்
மதில் உறுப்பு.                                           59