மிதிலைக் காட்சிப் படலம் - 628

bookmark

அந்திமாலை வந்தமை

628.

‘கடலோ? மழையோ? முழு நீலக்
   கல்லோ? காயா நறும் போதோ?
படர் பூங் குவளை நாள்மலரோ?
   நீலோற்பலமோ? பானலோ?-
இடர்சேர் மடவார் உயிர் உண்பது
   யாதோ?’ என்று தளர்வாள்முன்.
மடல் சேர் தாரான் நிறம் போலும்
   அந்தி மாலை வந்ததுவே!
 
கடலோ    - கருங்கடலோ?;  மழையோ  -   காள  மேகமோ?
முழு நீலக்கல்லோ  -  பெரிய இந்திர நீலத்தின்   மலையோ?;  காயா
நறும்போதோ -காயாச் செடியின் மணமுள்ளபூவோ; படர் பூங்குவளை
நறுமலரோ - படரும் அழகுள்ள கருங்குவளையின்  நறுமணப்பூவோ?;
நீலோற்பலமோ - நீலோற்பல மலரோ;  பானலோ  -   கருநெய்தல்
மலரோ?; இடர்சேர்  மடவார்  -  பலவகைத்  துன்பங்களும்  வந்து
அடைவதற்கு  இடமான  இளம்பெண்களின்; உயிர் உண்பது  யாதோ
- உயிரைக் கவர்வது (மேற்கூறியவற்றுள்)  எதுவோ?; என்று -  என்று
நினைந்து; தளர்வாள்முன் - (மனமும் உடம்பும்) தளர்பவளாகிய  அச்
சீதையின் எதிரிலே; அடல்சேர்  அசுரர் - வலிமை மிக்க  அசுரரின்;
நிறம்  போலும்  அந்திமாலை   -  நிறத்தைப்  போன்ற  மாலைப்
பொழுதும்; வந்தது - வந்து சேர்ந்தது.   

கடல்    முதலான  ஏழும்   இராமனது   திருமேனி   நிறத்துக்கு
உவமையாகும்.                                           65