எழுச்சிப் படலம் - 896
உடன் சென்ற சேனையின் மிகுதி
896.
வீரரும். களிறும். தேரும்.
புரவியும் மிடைந்த சேனை.
பேர்வு இடம் இல்லை; மற்று ஓர்
உலகு இல்லை; பெயர்க்கலாகா;
நீருடை ஆடையாளும்
நெளித்தனள் முதுகை என்றால்.
‘பார் பொறை நீக்கினான்’ என்று
உரைத்தது எப் பரிசு மன்னோ?
வீரரும் - காலாள் வீரர்களும்; களிறும் தேரும் - யானையும்
தேர்களும்; புரவியும் மிடைந்த சேனை - குதிரையும் (என்ற
நால்வகைப் படையும்) நெருங்கியுள்ள சேனைகளும்; பெயர்வது ஆக
- (இந்த இடத்தைவிட்டு) அப்பாலே செல்வதென்றாலும்; பேர்வு -
நிலைபெயர்ந்து செல்வதற்கு; இடம் இல்லை - வேறொரு இடமில்லை;
மற்று ஓர் உலகு இல்லை - (?ஏனென்றால்) வேறொரு வெற்றுலகும்
இல்லையாதலால்; நீர் உடைய ஆடையாளும் - கடலாகிய நீரை
ஆடையாக உடைய பூமிதேவியும் (அந்த நாற்படைகளின் பாரத்தைப்
பொறுக்கமாட்டாமல்); முதுகை நெளித்தனள் - தன் முதுகை
நெளித்துக் கொடுத்தாள்; என்றால் - என்றால் (தசரதன்); பார்பொறை
- பூமியின் சுமையை; நீக்கினான்- போக்கினான்; என்று உரைத்தது-
என்று அறிவுடையோர் கூறியது; எப் பரிசு - எவ்வாறு பொருந்தும்?
நால்வகைச் சேனைகளும் அசைந்து கொடுக்கவும் இடமில்லை;
மாற்றி வைக்கவும். மற்றோர் உலகமில்லை. ஆதலால் சுமை தாங்காது
பூமி நெளிந்தாள் என்றால் அரசன் பூமிபாரம் தீர்த்தான் என்று கூறல்
எவ்வாறு பொருந்தும்? என்பது வஞ்சப் புகழ்ச்சியாம். 80
