கார்முகப் படலம் - 754
மிதிலை மக்கள் கூற்று (754-758)
வில்லினைக் கண்டோர் விளம்பியமை
754.
‘சங்கொடு சக்கரம்
தரித்த செங் கை அச்
சிங்க ஏறு அல்லனேல்.
இதனைத் தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன்?
இன்று ஏற்றின். இச் சிலை.
மங்கைதன் திருமணம்
வாழுமால். என்பார்
சங்கொடு சக்கரம்- சங்கு சக்கரங்களை; தரித்த செங்கைய -
தாங்கிய செம்மையான கைகளையுடைய; சிங்க ஏறு அல்லனேல்-
ஆண்சிங்கம் போன்ற திருமால் (நாணேற்றி) வளையாமல் போனால்;
இதனை - இந்தச் சிவதனுசை; தீண்டுவான் ஒருவன் - தீண்டுவதற்கும்
தகுதியுள்ள ஒருவன்; எங்கு உளன் - (வேறு) எங்கே இருக்கிறான்?;
இன்று - இன்றைய தினம்; இச்சிலை ஏற்றின் - (அத் திருமாலே
வந்து) இந்த வில்லை நாணேற்றி வளைப்பானாயின்; மங்கைத்தன்
திருமணம் - சீதையின் திருமணமானது; வாழும் - நல்வாழ்வு பெறும்;
என்பார் - என்று கூறினர் (சிலர்).
சிங்க ஏறு - திருமால். விசுவாமித்திரன் அழைத்து வந்த
இச்சிறுவன் திருமாலாயிருப்பின் இது கைகூடுதலும். சீதை நன்மணம்
பெறுதலும் கூடும் என்பதாம். ஏனெனில். திருமாலைத் தவிர வேறு
யாராலும் .இவ்விலல்லைத் தீண்டுதல் என்பதும் இயலாது. 5
