கார்முகப் படலம் - 754

bookmark

மிதிலை மக்கள் கூற்று (754-758)

வில்லினைக் கண்டோர் விளம்பியமை 
 
754.

‘சங்கொடு சக்கரம்
   தரித்த செங் கை அச்
சிங்க ஏறு அல்லனேல்.
   இதனைத் தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன்?
   இன்று ஏற்றின். இச் சிலை.
மங்கைதன் திருமணம்
   வாழுமால். என்பார்
 
சங்கொடு    சக்கரம்- சங்கு சக்கரங்களை; தரித்த  செங்கைய -
தாங்கிய  செம்மையான  கைகளையுடைய;  சிங்க  ஏறு  அல்லனேல்-
ஆண்சிங்கம்  போன்ற  திருமால் (நாணேற்றி)  வளையாமல்  போனால்;
இதனை - இந்தச்  சிவதனுசை; தீண்டுவான் ஒருவன் - தீண்டுவதற்கும்
தகுதியுள்ள  ஒருவன்;  எங்கு உளன் - (வேறு) எங்கே  இருக்கிறான்?;
இன்று  -  இன்றைய  தினம்;  இச்சிலை  ஏற்றின் - (அத் திருமாலே
வந்து)  இந்த  வில்லை  நாணேற்றி  வளைப்பானாயின்;  மங்கைத்தன்
திருமணம் - சீதையின் திருமணமானது;  வாழும் - நல்வாழ்வு பெறும்;
என்பார் - என்று கூறினர் (சிலர்).

சிங்க     ஏறு  -  திருமால்.  விசுவாமித்திரன்   அழைத்து  வந்த
இச்சிறுவன்  திருமாலாயிருப்பின் இது கைகூடுதலும்.  சீதை   நன்மணம்
பெறுதலும்  கூடும்  என்பதாம்.  ஏனெனில்.  திருமாலைத்  தவிர வேறு
யாராலும் .இவ்விலல்லைத் தீண்டுதல் என்பதும் இயலாது.            5