கார்முகப் படலம் - 762
762.
‘உக்கன பல்லொடு கரங்கள். ஓடினர்;
புக்கனர். வானவர் புகாத சூழல்கள்;
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின;
முக் கண் எண் தோளவன் முனிவும் மாறினான்.
பல்லொடு - (அவ் வேள்விக்கு வந்த தேவர்களின்) பற்களும்;
கரங்கள் - கைகளும்; உக்கன - கீழே சிந்தின; வானவர் -
(அல்லாமலும்) தேவர்களில் சிலர்; ஓடினர் - ஓடி; புகாத சூழல்கள் -
அதுவரை தாம் சென்று அறியாத இடங்களில்; புக்கனர் - பதுங்கிக்
கொண்டார்கள்;தக்கன் நல்வேள்வியில் தழலும் - தக்கனின் வேள்விக்
குண்டங்களில் எழுப்பிய நெருப்பும்; ஆறின - ஆறிவிட்டன; முக்கண்
எண்தோளவன் - (இவ்வாறெல்லாம் ஆன பின்பே) மூன்று
கண்களையும் எட்டுத் தோள்களையும் உடைய சிவன்; முனிவு
மாறினான் - (தன்) சினமும் தணிந்தான்.
பல் உக்கது - கதிரவனுக்கு. 13
