வரைக்காட்சிப் படலம் - 912

bookmark

அரசமாளிகையை அறிந்து சேர்தல்

மைந்தரும் மங்கையரும் திரிந்த காட்சி 
 
912.

நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்.
வடிக்கும் அயில் வீரரும். மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின். எங்கும் முரல் சங்கின்.
கொடிக்களின் உணர்ந்து. அரசர் கோநகர் அடைந்தார்.
 
நடிக்கும்   மயில்  என்ன - ஆடும் மயிலைப் போல;  வரும்  -
வருகின்ற; நவ்வி  விழியாரும்  -  மான்  போன்ற  கண்களையுடைய
மகளிரும்;  வடிக்கும்  அயில்  வீரரும் -  வடித்துக்  கூர்மையாக்கிய
வேல்  வீரரும்; மயங்கினர் திரிந்தார் - மயங்கிய வண்ணம் திரிந்தனர்
(தாம்  போகும் இடம்  இன்னதென்று தெரியாததால்); இடிக்கும் முரசக்
குரலின  - (பின்பு)  முழங்குகின்ற மங்கள முரசின் ஒலியாலும்; ஏங்கும்
முரல் சங்கின் - எங்கும் ஒலியெழும் சங்கநாதங்களாலும்; கொடிகளின்
- கொடிகளாலும்; உணர்ந்து -  (அரசனது மாளிகை இதுவென) தெரிந்து
கொண்டு;  அரசர்  கோநகர்   அடைந்தார்   -   அரசன்  தங்கிய
மாளிகையை அடைந்தார்கள். 

பட    மாடங்கள்  பலவும் ஒரே தன்மையில் அமைந்திருந்தமையால்
வேற்றுமை  தெரியாமல்  மயங்கி.  முரசு.  சங்கு.  கொடிகளால் அரசன்
தங்கிய  மாடம் இதுவென்று அறிந்தனர்  என்பது  ஒவ்வொரு  மாடமும்
அரச மாளிகை போல இருந்தது.                               15