கீரனூர்
 
                                                    பாடல் 952
தான தானன தத்தன தத்தன 
தான தானன தத்தன தத்தன 
தான தானன தத்தன தத்தன ...... தனதான 
ஈர மோடுசி ரித்துவ ருத்தவும் 
நாத கீதந டிப்பிலு ருக்கவும் 
ஏவ ராயினு மெத்திய ழைக்கவு ...... மதராஜன் 
ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும் 
வீதி மீதுத லைக்கடை நிற்கவும் 
ஏறு மாறும னத்தினி னைக்கவும் ...... விலைகூறி 
ஆர பாரத னத்தைய சைக்கவு 
மாலை யோதிகு லைத்துமு டிக்கவும் 
ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக 
ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு 
மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும் 
ஆன தோதக வித்தைகள் கற்பவ ...... ருறவாமோ 
பார மேருப ருப்பத மத்தென 
நேரி தாகஎ டுத்துட னட்டுமை 
பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப் 
பாதி வாலிபி டித்திட மற்றொரு 
பாதி தேவர்பி டித்திட லக்ஷ¤மி 
பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு 
கீர வாரிதி யைக்கடை வித்ததி 
காரி யாயமு தத்தைய ளித்தக்ரு 
பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே 
கேடி லாவள கைப்பதி யிற்பல 
மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய 
கீர னுருறை சத்தித ரித்தருள் ...... பெருமாளே. 
 

 
                                            