சீகாழி
 
                                                    பாடல் 764
தனதன தனதன தந்த தானன 
தனதன தனதன தந்த தானன 
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான 
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும் 
அரிவையர் வசையுட னங்கி போல்வர 
அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும் 
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ 
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற 
அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய் 
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை 
வழிவச மறஅற நின்று சோர்வுற 
முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே 
முருகவிழ் திரள்புய முந்து வேலணி 
முளரியொ டழகிய தொங்கல் தாரினை 
முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ 
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி 
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய 
திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி 
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள் 
திமிலையொ டறைபறை நின்று மோதிட 
சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே 
மலைதனி லொருமுநி தந்த மாதுதன் 
மாலரடி வருடியெ நின்று நாடொறு 
மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே 
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர 
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில் 
வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே. 
பாடல் 765 
தனன தான தானான தனன தான தானான 
தனன தான தானான ...... தனதான 
இரத மான தேனூற லதர மான மாமாத 
ரெதிரி லாத பூணார ...... முலைமீதே 
இனது போடு மேகாச உடையி னாலு மாலால 
விழியி னாலு மாலாகி ...... யநுராக 
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு 
ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி 
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும் 
விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய் 
அரக ராஎ னர்முடர் திருவெ ணீறி டர்முடர் 
அடிகள் பூசி யர்முடர் ...... கரையேற 
அறிவு நூல்க லர்முடர் நெறியி லேநி லர்முடர் 
அறம்வி சாரி யர்முடர் ...... நரகேழிற் 
புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார ...... முருகோனே 
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு 
புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே. 
பாடல் 766 
ராகம் - ஜோன்புரி 
தாளம் - அங்கதாளம் (6 1/2) 
தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2 
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த 
தானத்தன தான தனந்த ...... தனதான 
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த 
ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் 
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து 
ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் 
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த 
கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே 
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று 
கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே 
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து 
சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் 
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று 
தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா 
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து 
காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் 
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து 
காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. 
பாடல் 767 
தய்யா தத்தன தானன தானன 
தய்யா தத்தன தானன தானன 
தய்யா தத்தன தானன தானன ...... தனதான 
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை 
மெய்யா ரப்பணி பூஷண மாலைக 
ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி 
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு 
கையா ரக்கணை மோதிர மேய்பல 
வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச் 
செய்வா ரிப்படி யேபல வாணிப 
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை 
செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச் 
செய்வா ரிற்படு நானொரு பாதகன் 
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது 
செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே 
மையா ரக்கிரி யேபொடி யாய்விட 
பொய்சூ ரப்பதி யேகெட வானவர் 
வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா 
வையா ளிப்பரி வாகன மாகொளு 
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய் 
மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே 
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ் 
செய்யா முத்தமி ழாகர னேபுகழ் 
தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத் 
திய்யா ரக்கழு வேறிட நீறிடு 
கையா அற்புத னேபிர மாபுர 
செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. 
பாடல் 768 
தத்தா தத்தா தத்தா தத்தா 
தத்தா தத்தத் ...... தனதான 
கட்கா மக்ரோ தத்தே கட்சீ 
மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக் 
கச்சா பிச்சா கத்தா வித்தா 
ரத்தே யக்கொட் ...... களைநீளக் 
கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே 
யிட்டா சைப்பட் ...... டிடவேவை 
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே 
னித்தீ தத்தைக் ...... களைவாயே 
வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
விக்கா னத்தைத் ...... தரிமாறன் 
வெப்பா றப்பா டிக்கா ழிக்கே 
புக்காய் வெற்பிற் ...... குறமானை 
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய் 
முற்சார் செச்சைப் ...... புயவீரா 
முத்தா முத்தீ யத்தா சுத்தா 
முத்தா முத்திப் ...... பெருமாளே. 
பாடல் 769 
தந்த தானன தனதன தனதன 
தந்த தானன தனதன தனதன 
தந்த தானன தனதன தனதன ...... தனதான 
கொங்கு லாவிய குழலினு நிழலினு 
நஞ்ச ளாவிய விழியினு மிரணிய 
குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர் 
கொம்பு சேர்வன இடையினு நடையினு 
மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி 
கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய 
சங்கை யாளியை அணுவிடை பிளவள 
வின்சொல் வாசக மொழிவன இவையில 
சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந் 
தண்டை நூபுர மணுகிய இருகழல் 
கண்டு நாளவ மிகையற விழியருள் 
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே 
வங்க வாரிதி முறையிட நிசிசரர் 
துங்க மாமுடி பொடிபட வடவனல் 
மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி 
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய 
சண்பை மாநக ருறையுமொ ரறுமுக 
வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே 
பங்க வீரியர் பறிதலை விரகினர் 
மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர் 
பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர் 
பண்பி லாதவர் கொலைசெயு மனதின 
ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை 
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே. 
பாடல் 770 
தந்த தந்தன தனதன தனதன 
தந்த தந்தன தனதன தனதன 
தந்த தந்தன தனதன தனதன ...... தனதான 
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை 
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை 
தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர் 
சந்த தம்பொலி வழகுள வடிவினர் 
வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர் 
தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே 
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர் 
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர் 
செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித் 
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில 
னென்று சண்டைகள் புரிதரு மயலியர் 
சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய் 
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர் 
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய 
மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே 
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ 
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல் 
வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா 
தந்த னந்தன தனதன தனவென 
வண்டு விண்டிசை முரல்தரு மணமலர் 
தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே 
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு 
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு 
சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே. 
பாடல் 771 
ராகம் - ராக மாலிகை 
தாளம் - ஆதி 
தனதன தந்தன தந்தன தந்தன 
தனதன தந்தன தந்தன தந்தன 
தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான 
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு 
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி 
தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ் 
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள 
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில் 
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும் 
விருது துலங்க சிகண்டியி லண்டரு 
முருகி வணங்க வரும்பத மும்பல 
விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின் 
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி 
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல 
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே 
கருதியி லங்கை யழிந்துவி டும்படி 
அவுணர டங்கம டிந்துவி ழும்படி 
கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன் 
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு 
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை 
கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி 
மருது குலுங்கி நலங்க முனிந்திடு 
வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள் 
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி 
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய 
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர் 
மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே. 
பாடல் 772 
தந்தத்தன தானன தந்தத் ...... தனதான 
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே 
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே. 
பாடல் 773 
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத் 
தத்தனா தத்தனத் ...... தனதான 
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத் 
தெற்கிலூ தைக்கனற் ...... றணியாத 
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச் 
சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக் 
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக் 
கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு 
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க் 
கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய் 
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித் 
தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய 
தத்வவே தத்தனுற் பத்திபோ தித்தஅத் 
தத்வ்ரு பக்கிரிப் ...... புரைசாடிக் 
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக் 
குத்துரா வுத்தபொற் ...... குமரோனே 
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக் 
கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே. 
பாடல் 774 
ராகம் - ஹம்ஸநாதம் 
தாளம் - அங்கதாளம் (5) (திஸ்ர்ருபகம்) 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
தனதன தாந்த தான தனதன தாந்த தான 
தனதன தாந்த தான ...... தனதான 
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால 
தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ் 
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல் 
வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும் 
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை 
புழுககில் சாந்து பூசி ...... யரசாகி 
இனிதிரு மாந்து வாழு மிருவினை நீண்ட காய 
மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ 
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை 
மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக 
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி 
மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே 
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு 
கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக் 
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய 
கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே. 
பாடல் 775 
ராகம் - பந்துவராளி 
தாளம் - திஸ்ர த்ருபுடை (7) 
தானாதன தானன தானன 
தானாதன தானன தானன 
தானாதன தானன தானன ...... தந்ததான 
பூமாதுர மேயணி மான்மறை 
வாய்நாலுடை யோன்மலி வானவர் 
கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம் 
பூராயம தாய்மொழி நூல்களும் 
ஆராய்வதி லாதட லாசுரர் 
போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி 
நீமாறரு ளாயென ஈசனை 
பாமாலைக ளால்தொழு தேதிரு 
நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு 
நீரேர்தரு சானவி மாமதி 
காகோதர மாதுளை கூவிளை 
நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே 
போமாறினி வேறெது வோதென 
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு 
பூலோகமொ டேயறு லோகமு 
நேரோர் நொடி யேவரு வோய்சுர 
சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங் 
காமாவறு சோம ஸமானன 
தாமாமண மார்தரு நீபசு 
தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக் 
காவாயடி நாளசு ரேசரை 
யேசாடிய கூர்வடி வேலவ 
காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே. 
பாடல் 776 
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன 
தனனத்தத் தானத் தானன ...... தனதான 
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள் 
மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக 
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள் 
வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர் 
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள் 
குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க் 
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை 
குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே 
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட 
ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா 
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில 
கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே 
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை 
தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே 
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில் 
சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே. 
பாடல் 777 
தனதனன தத்ததன தனதனன தத்ததன 
தனதனன தத்ததன ...... தனதான 
விடமெனமி குத்தவட வனலென வுயர்த்துரவி 
விரிகதி ரெனப்பரவு ...... நிலவாலே 
விதனமிக வுற்றுவரு ரதிபதி கடுத்துவிடு 
விரைதரு விதட்கமல ...... கணையாலே 
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல் 
அழலொடு கொதித்துவரு ...... கடைநாளில் 
அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற 
அவசமொ டணைத்தருள ...... வரவேணும் 
அடவிதனில் மிக்கபரு வரையவ ரளித்ததிரு 
அனையமயில் முத்தமணி ...... சுரயானை 
அழகிய மணிக்கலச முலைகளில் மயக்கமுறு 
மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா 
கடதடக ளிற்றுமுக ரிளையவ கிரிக்குமரி 
கருணையொ டளித்ததிற ...... முருகோனே 
கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி 
கழுமலந கர்க்குமர ...... பெருமாளே. 
 

 
                                            