திருத்துருத்தி
 
                                                    பாடல் 846
தனத் தனத்தன தானன தானன 
தனத் தனத்தன தானன தானன 
தனத் தனத்தன தானன தானன ...... தனதான 
மலைக் கனத்தென மார்பினி லேயிரு 
முலைக் கனத்துற வேயிடை நூலென 
வளைத்து குப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத 
மயிற் குலத்தவ ராமென நீள்கலை 
நெகிழ்த்து வித்திரு வார்விழி வேல்கொடு 
மயக்கி நத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி 
விலைக் கெனத்தன மாயிர மாயிர 
முலைக்க ளப்பினு மாசைபொ தாதென 
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய் 
வெடுக் கெடுத்தும காபிணி மேலிட 
முடக்கி வெட்கு மதாமத வீணனை 
மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே 
அலைக் கடுத்தசு ரார்பதி கோவென 
விடப் பணச்சிர மாயிர சேடனும் 
அதிர்த்தி டக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா 
அடைக் கலப்பொரு ளாமென நாயெனை 
அழைத்து முத்திய தாமநு பூதியெ 
னருட்டி ருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே 
சிலைக்கை முப்புர நீறெழ வேதிரு 
வுளத்தி லற்பமெ னாநினை தேசிகர் 
சிறக்க முத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா 
திருக் கடப்பலர் சூடிய வார்குழல் 
குறத்தி கற்புட னேவிளை யாடியொர் 
திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே. 
 

 
                                            