திருநாவலூர்
 
                                                    பாடல் 743
தானதன தத்த தானதன தத்த 
தானதன தத்த ...... தனதான 
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற 
கோரமதன் விட்ட ...... கணையாலே 
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற 
கோகிலமி குத்த ...... குரலாலே 
ஆலமென விட்டு வீசுகலை பற்றி 
ஆரழலி றைக்கு ...... நிலவாலே 
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த 
மாசைகொட ணைக்க ...... வரவேணும் 
நாலுமறை கற்ற நான்முகனு தித்த 
நாரணனு மெச்சு ...... மருகோனே 
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து 
நாகமற விட்ட ...... மயில்வீரா 
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி 
சீரணி தனத்தி ...... லணைவோனே 
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற 
தேவர்சிறை விட்ட ...... பெருமாளே. 
 

 
                                            