திருநெல்வாயில்
 
                                                    பாடல் 749
ராகம் - நாட்டை 
தாளம் - அங்கதாளம் (8) 
தகிட-1 1/2, தக-1, திமி-1 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
தனன தானன தானனாத் தனந்த 
தனன தானன தானனாத் தனந்த 
தனன தானன தானனாத் தனந்த ...... தனதான 
அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க 
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர் 
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து 
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி 
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத 
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து 
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச 
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி 
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து 
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து 
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே 
நறிய வார்குழல் வானநாட் டரம்பை 
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி 
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர 
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த 
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து 
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர 
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து 
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து 
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா 
மரவு காளமு கீல்கள்கூட் டெழுந்து 
மதியு லாவிய மாடமேற் படிந்த 
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே. 
 

 
                                            