திருப்பழுவூர்
 
                                                    பாடல் 890
தனன தந்தன தாத்த தானன 
தனன தந்தன தாத்த தானன 
தனன தந்தன தாத்த தானன ...... தனதான 
விகட சங்கட வார்த்தை பேசிகள் 
அவல மங்கைய ரூத்தை நாறிகள் 
விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம் 
விதம்வி தங்களை நோக்கி யாசையி 
லுபரி தங்களை மூட்டி யேதம 
இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர் 
சகல மஞ்சன மாட்டி யேமுலை 
படவ ளைந்திசை மூட்டி யேவரு 
சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே 
சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது 
மலர வுந்தியை வாட்டி யேயிடை 
தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ 
திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு 
தமையர் தம்பியர் மூத்த தாதையர் 
திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான 
செனம டங்கலு மாற்றி யேயுடல் 
தகர அங்கவர் கூட்டை யேநரி 
திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி 
அகடு துஞ்சிட மூட்டு பாரத 
முடிய அன்பர்க ளேத்த வேயரி 
யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே 
அமர ரந்தணர் போற்ற வேகிரி 
கடல திர்ந்திட நோக்கு மாமயில் 
அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே. 
 

 
                                            