திருப்பழையாறை
 
                                                    பாடல் 877
தானத்தத் தானன தானன 
தானத்தத் தானன தானன 
தானத்தத் தானன தானன ...... தனதான 
தோடுற்றுக் காதள வோடிய 
வேலுக்குத் தானிக ராயெழு 
சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே 
சோடுற்றத் தாமரை மாமுகை 
போலக்கற் பூரம ளாவிய 
தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார் 
கூடச்சிக் காயவ ரூழிய 
மேபற்றிக் காதலி னோடிய 
கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக் 
கோபித்துத் தாயென நீயொரு 
போதத்தைப் பேசவ தாலருள் 
கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும் 
வேடிக்கைக் காரவு தாரகு 
ணபத்மத் தாரணி காரண 
வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா 
வேலைக்கட் டாணிம காரத 
சூரர்க்குச் சூரனை வேல்விடு 
வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே 
ஆடத்தக் காருமை பாதியர் 
வேதப்பொற் கோவண வாடையர் 
ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே 
ஆடப்பொற் கோபுர மேவிய 
ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை 
யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே. 
 

 
                                            