திருவம்பர்
 
                                                    பாடல் 805
தான தந்தனந் தான தந்ததன 
தான தந்தனந் தான தந்ததன 
தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான 
சோதி மந்திரம் போத கம்பரவு 
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி 
தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல் 
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை 
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு 
தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும் 
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி 
கோல மண்டிநின் றாடி யின்பவகை 
வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில் 
வேதி யன்புரிந் தேடு கண்டளவி 
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட 
வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ 
ஆதி மண்டலஞ் சேர வும்பரம 
சோம மண்டலங் கூட வும்பதும 
வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை 
ஆழி மண்டலந் தாவி யண்டமுத 
லான மண்டலந் தேடி யொன்றதொழு 
கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச் 
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி 
யாகி விண்பறந் தோட மண்டியொரு 
சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா 
சோடை கொண்டுளங் கான மங்கைமய 
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ 
சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே. 
 

 
                                            