திருவீழிமிழலை
 
                                                    பாடல் 847
ராகம் - அமிர்த வர்ஷணி 
தாளம் - ஆதி 
தனனா தனனா தனனா தனனா 
தனனா தனனா ...... தனதான 
எருவாய் கருவாய் தனிலே யுருவா 
யிதுவே பயிராய் ...... விளைவாகி 
இவர்போ யவரா யவர்போ யிவரா 
யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல 
ஓருதா யிருதாய் பலகோ டியதா 
யுடனே யவமா ...... யழியாதே 
ஓருகால் முருகா பராம குமரா 
உயிர்கா வெனவோ ...... தருள்தாராய் 
முருகா வெனவோர் தரமோ தடியார் 
முடிமே லிணைதா ...... ளருள்வோனே 
முநிவோ ரமரோர் முறையோ வெனவே 
முதுசூ ருரமேல் ...... விடும்வேலா 
திருமால் பிரமா வறியா தவர்சீர் 
சிறுவா திருமால் ...... மருகோனே 
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ் 
திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே. 
 

 
                                            