நாகப்பட்டினம்
 
                                                    பாடல் 828
ராகம் - ஜோன்புரி 
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12) 
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த 
தான தத்த தத்த தந்த ...... தனதான 
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த 
ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென் 
றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும் 
ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற் 
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்க ரைத்த நந்த 
கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன் 
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து 
கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே 
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் 
மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே 
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த 
வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா 
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற 
நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே 
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த 
நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 829 
தான தந்ததன தந்ததன தந்ததன 
தான தந்ததன தந்ததன தந்ததன 
தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான 
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ 
டார மும்படித ரம்பொறியு டன்பணிகள் 
மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட 
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக 
பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி 
வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக 
சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர் 
பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச 
தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர் 
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி 
யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி 
தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே 
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர 
சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும் 
வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன் 
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய 
ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு 
மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா 
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி 
யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி 
ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்த்முல 
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு 
தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய 
நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே. 
பாடல் 830 
ராகம் - யமுனாகல்யாணி 
தாளம் - ஆதி 
தனனா தனனா தனனா தனனா 
தனனா தனனா ...... தனதான 
விழுதா தெனவே கருதா துடலை 
வினைசேர் வதுவே ...... புரிதாக 
விருதா வினிலே யுலகா யதமே 
லிடவே மடவார் ...... மயலாலே 
அழுதா கெடவே அவமா கிடநா 
ளடைவே கழியா ...... துனையோதி 
அலர்தா ளடியே னுறவாய் மருவோ 
ரழியா வரமே ...... தருவாயே 
தொழுதார் வினைவே ரடியோ டறவே 
துகள்தீர் பரமே ...... தருதேவா 
சுரர்பூபதியே கருணா லயனே 
சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே 
எழுதா மறைமா முடிவே வடிவே 
லிறைவா எனையா ...... ளுடையோனே 
இறைவா எதுதா வதுதா தனையே 
இணைநா கையில்வாழ் ...... பெருமாளே. 
 

 
                                            