வடதிருமுல்லைவாயில்
 
                                                    பாடல் 682
ராகம் - மோஹனம் ; தாளம் - அங்கதாளம் (6 1/2) 
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி) 
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2 
தனதய்ய தானன தானன 
தனதய்ய தானன தானன 
தனதய்ய தானன தானன ...... தனதான 
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி 
தனநிவ்வி யேகரை யேறிட 
அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர 
அருள்வல்லை யோநெடு நாளின 
மிருளில்லி லேயிடு மோவுன 
தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே 
குணவில்ல தாமக மேரினை 
யணிசெல்வி யாயரு ணாசல 
குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத 
குடிலில்ல மேதரு நாளெது 
மொழிநல்ல யோகவ ரேபணி 
குணவல் வாசிவ னேசிவ ...... குருநாதா 
பணிகொள்ளி மாகண பூதமொ 
டமர்கள்ளி கானக நாடக 
பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே 
படரல்லி மாமலர் பாணம 
துடைவில்லி மாமத னாரனை 
பரிசெல்ரவி யார்மரு காசுர ...... முருகேசா 
மணமொல்லை யாகி நகாகன 
தனவல்லி மோகன மோடமடர் 
மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா 
மருமல்லி மாவன நீடிய 
பொழில் மெல்லி காவன மாடமை 
வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே. 
பாடல் 683 
தான தானன தானன தந்தன 
தான தானன தானன தந்தன 
தான தானன தானன தந்தன ...... தனதான 
சோதி மாமதி போல்முக முங்கிளர் 
மேரு லாவிய மாமுலை யுங்கொடு 
தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே 
சோலி பேசிமு னாளிலி ணங்கிய 
மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு 
சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி 
மோதி யேகனி வாயத ரந்தரு 
நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின் 
மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி 
மோச மேதரு தோதக வம்பியர் 
மீதி லேமய லாகிம னந்தளர் 
மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ 
ஆதி யேயெனும் வானவர் தம்பகை 
யான சூரனை மோதிய ரும்பொடி 
யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா 
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர 
லேறி யேயுறி மீதளை யுங்கள 
வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே 
வாதி னால்வரு காளியை வென்றிடு 
மாதி நாயகர் வீறுத யங்குகை 
வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர் 
வாச மாமல ரோனொடு செந்திரு 
மார்பில் வீறிய மாயவ னும்பணி 
மாசி லாமணி யிசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே. 
பாடல் 684 
தய்யதன தான தந்தன 
தய்யதன தான தந்தன 
தய்யதன தான தந்தன ...... தனதான 
மின்னிடைக லாப தொங்கலொ 
டன்னமயில் நாண விஞ்சிய 
மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே 
மெள்ளவுமு லாவி யிங்கித 
சொல்குயில்கு லாவி நண்பொடு 
வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக 
கன்னியர்கள் போலி தம்பெறு 
மின்னணிக லார கொங்கையர் 
கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான 
கண்ணியிலு ளாக சுந்தர 
பொன்னியல்ப தார முங்கொடு 
கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய் 
சென்னியிலு டாடி ளம்பிறை 
வன்னியும ராவு கொன்றையர் 
செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா 
செம்முகஇ ராவ ணன்தலை 
விண்ணுறவில் வாளி யுந்தொடு 
தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே 
துன்னியெதிர் சூரர் மங்கிட 
சண்முகம தாகி வன்கிரி 
துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே 
சொல்லுமுனி வோர்த வம்புரி 
முல்லைவட வாயில் வந்தருள் 
துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே. 
 

 
                                            