விஜயபுரம்
 
                                                    பாடல் 815
ராகம் - ஹம்ஸாநந்தி 
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) 
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன 
தனதன தந்தன தானன ...... தனதான 
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை 
குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு 
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு 
குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய 
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி 
லவுடத மும்பல யோகமு ...... முயலாநின் 
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி 
னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ 
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர 
மிடிபட இன்பம கோததி ...... வறிதாக 
இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர 
எழில்பட மொன்று மொராயிர ...... முகமான 
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ 
வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர் 
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட 
விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே. 
 

 
                                            