திருப்பராய்த்துறை
 
                                                    பாடல் 921
தானன தந்தன தாத்த தத்தன 
தானன தந்தன தாத்த தத்தன 
தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான 
வாசனை மங்கையர் போற்று சிற்றடி 
பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட 
மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை 
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை 
நூலிடை நன்கலை தேக்க இக்குவில் 
மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள் 
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர் 
தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ 
நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான 
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட 
யோகமி குந்திட நீக்கி யிப்படி 
நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே 
தேசம டங்கலு மேத்து மைப்புய 
லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர 
தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே 
தீரனெ னும்படி சாற்று விக்ரம 
சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல் 
தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா 
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம 
லாசனன் வந்துல காக்கி வைத்திடு 
வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக
மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய 
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத 
மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே. 
 

 
                                            